கபடி போட்டியில் கேலரி சரிந்து பார்வையாளர் பரிதாப பலி

மாண்டியா: கேலரி சரிந்து விழுந்ததில், கபடி போட்டி பார்க்க வந்தவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர்.
மாண்டியா மேலுகோட் அருகே மல்லநாயக்கனகட்டே கிராமத்தில், 'ஸ்ரீபைரவா கோப்பை' என்ற பெயரில், நேற்று முன்தினம் இரவு கபடி போட்டி நடந்தது.
திறந்தவெளியில் நடந்த இந்த போட்டியை காண, மல்லநாயக்கனகட்டே, அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் கூடினர். மக்கள் போட்டியை அமர்ந்து காண்பதற்கு வசதியாக கேலரி அமைக்கப்பட்டு இருந்தது. கேலரிக்குள் நிறைய பேர் அமர்ந்து போட்டியை பார்த்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக கேலரி சரிந்து விழுந்ததில், இரும்பு கம்பிகளுக்குள் சிக்கி ஒருவர் இறந்தார். 13 பேர் காயம் அடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இறந்தவர் உடலும் மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் உயிரிழந்த நபர் மல்லநாயக்கனகட்டே கிராமத்தின் பாப்பனச்சாரி, 50 என்பது தெரிந்தது.
குறைந்த வலிமை கொண்ட, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கேலரி அமைத்ததாலும், நிறைய மக்கள் அமர்ந்து இருந்தாலும், வலிமை தாங்காமல் கேலரி சாய்ந்தது தெரிந்து உள்ளது.
போட்டியை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
மேலும்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!