விபத்தில் அரசு அதிகாரி பலி

காரிப்பட்டி: சிதம்பரம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் எழில்வேந்தன், 59. சென்னையில் அரசு பொது வினியோக திட்டத்தில், 'சிவில் சப்ளை' மேலாளராக பணிபுரிந்தார். இவர், 'ஸ்விப்ட் டிசையர்' வாடகை கார் பேசி, சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை, காஞ்சிபுரத்தை சேர்ந்த டிரைவர் வினோத், 34, ஓட்டினார்.

நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, சேலம் மாவட்டம் வாழப்பாடி, கருமாபுரம் அருகே வந்தபோது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்புறம் சென்ற கார் மீது மோதியது. இதில் அப்படியே கார் திரும்பி எதிரே நின்றது. அப்போது வந்த லாரி, நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த எழில்வேந்தன், வினோத்தை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதில் எழில்வேந்தன் உயிரிழந்தார். வினோத் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். காரிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement