திருமணமாகாத விரக்தி; தொழிலாளி தற்கொலை
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த புள்ளப்பநாயக்கன்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 43; கட்டட கூலி தொழிலாளி. திருமணம் ஆகாததால் விரக்தியில் இருந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததால், போதையில் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த, 26ம் தேதி வயிறு வலித்ததால், மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டதாக, வீட்டில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. திருமணம் ஆகாததாலும், குடியை நிறுத்த முடியாததாலும் மன உளைச்சலில் இருந்த நாகேந்திரன், மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக, பங்களாப்புதுார் போலீசார் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
-
ஓ.டி.டி., தளங்களில் ஆபாசக் காட்சிகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
-
பஹல்காம் சம்பவம்; ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் அஞ்சலி தீர்மானம்
-
வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
Advertisement
Advertisement