அமாவாசையால் மீன் விற்பனை மந்தம்
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே, கதவணை கட்டப்பட்டுள்ளது. இந்த கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகிறது.
சேமிக்கப்படும் நீரில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று, மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது, காவிரி ஆற்றில் குறைந்த தண்ணீர் மட்டும் செல்கிறது. இதனால் மீன்கள் குறைவாகவே வலையில் சிக்குகின்றன. நேற்று, அமாவாசை என்பதால் மீன் விற்பனை மந்த நிலையில் இருந்தது. இதில், ஜிலேபி மீன் கிலோ, 100 ரூபாய், கெண்டை மீன், 70 ரூபாய், விரால் மீன், 500 ரூபாய், பாறை, 130 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று, 300 கிலோ மீன்கள் விற்பனை செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தணும்; பரூக் அப்துல்லா ஆவேசம்
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்
-
செந்தில்பாலாஜியின் ஜாமின் ரத்து செய்யக் கோரிய வழக்கு: முடித்து வைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
ரஷ்யா, சீனாவை வம்படியாக இழுக்கிறது பாகிஸ்தான்!
-
தி.மு.க., அரசுக்கு அடுத்த சிக்கல்; சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து
-
சட்டசபையில் காரசார விவாதம்; வானதிக்கு ஆதரவாக அ.தி.மு.க., குரல்!
Advertisement
Advertisement