மாமதுரை கவியரங்கம்

மதுரை; மதுரையில் மாமதுரைக் கவிஞர் பேரவை சார்பில் 'எம்மொழிக்கும் மூத்த மொழி தமிழே' எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

தலைவர் பேராசிரியர் சி.சக்திவேல் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் இரா. ரவி வரவேற்றார்.

பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் இரா.வரதராஜன் முன்னிலை வகித்தனர். சக்திவேல் தலைமையில் கவிஞர்கள் ரவி, வரதராஜன், கல்யாணசுந்தரம், ராமபாண்டியன், பால் பேரின்பநாதன், குறளடியான், ச.லிங்கம்மாள், அனுராதா, மா.முனியாண்டி, அஞ்சூரியா க.ஜெயராமன், ஆறுமுகம், இதயத்துல்லா, ந.சுந்தரம், பாண்டி, பா.பழனி ஆகியோர் கவிதை பாடினர். சிறப்பாக கவிதை பாடிய குறளடியான், லிங்கம்மாள் பாராட்டப்பட்டனர்.

துணைச்செயலாளர் கங்காதரன் நன்றி கூறினார். கவியரங்கம் நடத்த மணியம்மை பள்ளியை தந்து உதவும் தாளாளர் புரட்சிப் பாவலர் மன்றத் தலைவர் வரதராஜனுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement