மைதானத்தில் கடைகள் அகற்றம்

கடலுார்; கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு, மாற்று இடத்தில் வைக்கப்பட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்த பிப்ரவரியில் கடலுார் வந்திருந்த போது, 35கோடி ரூபாய் மதிப்பில் மஞ்சக்குப்பம் மைதானத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அதன்படி மஞ்சக்குப்பம் மைதானத்தை சுத்தம் செய்து, சுற்றிலும் மதில்சுவர் அமைத்து நான்கு பக்கமும் வாயில் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.
இதற்காக, பழைய கலெக்டர் அலுவலகம் எதிரில் இருந்த கடைகளை அகற்ற உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. சிலர் தாங்களாகவே அகற்றிக்கொண்ட நிலையில், சிலர் மாற்று இடம் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
நேற்று மைதானத்தில் இருந்த 13 கடைகள், கிரேன் மூலம் அகற்றப்பட்டு கோர்ட்டுக்கு எதிரிலுள்ள பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு: வணிக வரித்துறை அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறை
-
புனே விமான நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை தீவிரம்
-
ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடுகளில் இந்தியா 5வது இடம்; இதோ பட்டியல்!
-
காங்கேயம் அருகே 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவக்கம்: பசுமாடுகள் ரூ.1.25 லட்சம், பூச்சி காளை ரூ.1.75 வரை விற்பனை
-
அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்
-
தி.மு.க., பீர் விருந்து; இ.பி.எஸ்., விமர்சனம்
Advertisement
Advertisement