2 ஆடு, 20 கோழிகள் பலி

பொங்கலுார்:

பொங்கலுார் ஒன்றியம், கருங்காலிபாளையத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன், விவசாயி. இவர் வீட்டில், 20 நாட்டுக்கோழிகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு நேற்று காலையில் சென்று பார்த்த பொழுது அனைத்து கோழிகளையும் வெறி நாய் கடித்து கொன்று விட்டது.

 பொங்கலுார், ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 60; விவசாயி. இவரது தோட்டத்தில் புகுந்த வெறிநாய்கள் இரண்டு ஆடுகளை கடித்து கொன்றது.

Advertisement