அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கு: போலீசாருக்கு ரூ.1 அபராதம் விதித்தது மனித உரிமை ஆணையம்

சென்னை: அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலா ரூ.1 இழப்பீடு வழங்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
@1br2019ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி அறப்போர் இயக்க தன்னார்வலர்கள் 11 பேர் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் ஆய்வு மேற்கொள்ள சென்றனர். அதற்காக சென்னை தரமணியில் உள்ள கல்லுக்குட்டை என்ற இடத்தை பார்வையிட சென்றனர். ஆனால் போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அறப்போர் இயக்கம் மீது வழக்கும் தொடரப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சென்னை தரமணி போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து தன்னார்வலர்களுக்கு இழப்பீடாக தலா ரூ.1 வழங்க வேண்டும் என்று அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் மனித உரிமை மீறல் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிந்து தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் கவிதா என 2 பேரும் 11 தன்னார்வலர்களுக்கு மொத்தம் ரூ.22 வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. இந்த விவரத்தை அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (5)
பா மாதவன் - chennai,இந்தியா
29 ஏப்,2025 - 17:42 Report Abuse

0
0
Reply
Padmasridharan - சென்னை,இந்தியா
29 ஏப்,2025 - 17:33 Report Abuse

0
0
Reply
Shekar - Mumbai,இந்தியா
29 ஏப்,2025 - 15:22 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
29 ஏப்,2025 - 14:57 Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
29 ஏப்,2025 - 14:50 Report Abuse

0
0
Reply
மேலும்
-
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் ஜூன் 5 ல் நிறைவுபெறும்!
-
பாக்., ஆதரவு கோஷம் எழுப்பியவர் அடித்துக்கொலை: கர்நாடகாவில் 15 பேர் கைது
-
பாக்., பாதுகாப்பு அமைச்சரின் 'எக்ஸ்' கணக்கை முடக்கியது இந்தியா
-
பிரீமியர் லீக் போட்டி: கோல்கட்டா அணி பேட்டிங்
-
பாலக்காடு நகராட்சியில் மோதல்: காங்., மார்க்சிஸ்ட் மீது பா.ஜ., தலைவர் குற்றச்சாட்டு
-
வேலூர் மயானத்தில் உடலை எரிக்காமல் நாடகமாடிய ஊழியர்: உறவினர்கள் வாக்குவாதம்
Advertisement
Advertisement