ரூ.10,000 லஞ்சம்: கருவூல அதிகாரி கைது

2

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடை சேர்ந்தவர் கவிதா, 50, சிக்கார்த்தனஹள்ளி அரசு நடுநிலைபள்ளியில் ஆசிரியை.

கடந்த, 2 ஆண்டுக்கு முன், கர்ப்பப்பை புற்றுநோய் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால், பணி செய்ய முடியாத சூழலில், விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு சேர வேண்டிய பண பலன்கள், 29.50 லட்சம் ரூபாய்க்கு கல்வித்துறை அனுமதி வழங்கிய நிலையில், பாலக்கோடு சார்நிலை கருவூலத்தில், இதற்கான அனுமதியை வழங்காமல், இழுத்தடித்து வந்தனர்.


பாலக்கோடு கூடுதல் சார்நிலை கருவூல அலுவலராக பணியாற்றி வந்த, திருமல்வாடியை சேர்ந்த ராமசந்திரன், 42, என்பவர், 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைபடி, நேற்று மதியம், 3:00 மணிக்கு கவிதா, லஞ்ச பணத்தை, கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர் ராமசந்திரனிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., நாகராஜ், இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், ராமசந்திரனை கைதுசெய்தனர்.

Advertisement