கோயில் திருவிழா

பேரையூர்; பேரையூர் அருகே சின்னக்கட்டளை சொர்ண முத்து மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.25 ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மன் சிங்க வாகனத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டியுடன் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பேரையூர், உசிலம்பட்டி, திருமங்கலத்திலிருந்து ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்பட்டன.

Advertisement