குளம் துார் வாரும் பணி

பண்ருட்டி; பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் குளம் துார்வாரும் பணி நடந்தது.

பண்ருட்டி ஒன்றியம் பெரியகாட்டுப்பாளையம் ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் குளம் துார வாரும் பணியை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.

முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம், சிங்காரவேல், பிரபு, தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், மணிகண்டன், வெங்கடேசன், செல்வகுமார் உடனிருந்தனர்.

Advertisement