மாநகராட்சி பெண் ஊழியர் லாரி மோதி பலி

ராஜாஜிநகர்: சாலையை கடக்க முயன்றபோது, லாரி மோதியதில் மாநகராட்சி பெண் ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தைச் சேர்ந்தவர் சரோஜம்மா, 51. மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்தார்.
ராஜாஜிநகர் சிவநகர் 'வெஸ்ட் ஆப் கார்ட் ரோடு' பகுதியில், நேற்று அவருக்கு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. காலை 6:30 மணிக்கு சிவநகர் பகுதியில் உள்ள, மாநகராட்சி அலுவலகத்திற்கு கையெழுத்துப் போட நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலை சிக்னலில், சிவப்பு நிற விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருந்தது. இதனால் சாலையை கடக்க முயன்றார். சிக்னலில் திடீரென பச்சை நிற விளக்கு மாறியது. இந்த நேரத்தில் அந்த வழியாக வேகமாக வந்த லாரி, சரோஜம்மா மீது மோதியது.
படுகாயம் அடைந்தவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். விஜயநகர் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ஐ.சி.எல்., பின்கார்ப் நிறுவன என்.சி.டி.,யில் முதலீடு வாய்ப்பு
-
இண்டஸ்இண்ட் வங்கி சி.இ.ஓ., ராஜினாமா
-
'பிரவாஹ்' தளத்தை மட்டுமே பயன்படுத்த வங்கிகளுக்கு உத்தரவு
-
ஏ.டி.எம்.,மில் 100, 200 ரூபாய்: ஆர்.பி.ஐ., உத்தரவு
-
'வொர்க்டே' ரூ.220 கோடி முதலீடு; அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
-
கோவை கோட்ட ஆர்.எம்.எஸ்.,சுக்கு கோ - ஆப்டெக்ஸ் வினியோக 'ஆர்டர்'