குண்டும், குழியுமான மதுார் கூட்டுச்சாலை

வாலாஜாபாத்:உத்திரமேரூர் ஒன்றியம், திருமுக்கூடல்- சாலவாக்கம் சாலையில் மதுார் கூட்டுச்சாலை உள்ளது.
மதுார் கூட்டுச்சாலை சுற்று வட்டார கிராமங்களின் மையப் பகுதியாக உள்ளது.
மதுார், அருங்குன்றம், சித்தாலப்பாக்கம், சிறுமையிலுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தோர், இங்குள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து, அங்கிருந்து காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.
மதுார் சுற்று வட்டார கிராமங்களில் தனியார் கல் குவாரி மற்றும் கல் அரவை தொழிற்சாலைகள் இயங்குகின்றன.
இந்த தொற்சாலைகளில் இருந்து லோடு ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள், மதுார் கூட்டுச்சாலை வழியாக இரவு, பகலாக இயக்கப்படுகின்றன.
இதனால், மதுார் கூட்டுச்சாலையின் சாலை குண்டும், குழியுமாக சேதமான நிலையிலேயே காணப்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, மதுார் கூட்டுச்சாலை பகுதியில், சிமென்ட் கான்கிரீட் சாலை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சர்ச்சைக்குரிய 'கயாப்' பதிவு: நீக்கியது காங்கிரஸ்
-
பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்
-
இந்தியாவும், பாகிஸ்தானும் பாதுகாப்பை பேணுங்கள்: அமெரிக்கா, ஐ.நா., வலியுறுத்தல்
-
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து எதிரொலி: வறண்டு கிடக்கின்றன பாக்., அணை
-
தேசிய நெடுஞ்சாலை ஓரம் சிமென்ட் கல் தயாரிப்பு - வெளியேறும் துாசியால் சிரமம்
-
சாக்கலூத்துமெட்டு ரோடு அமைக்க கோரி இன்று எம்.பி. தலைமையில் நடை பயணம்