தங்கநகை, பணம் திருடிய நபர் கைது

கோவை : கோவை மாநகர், வடவள்ளி காவல் நிலையத்துக்கு உட்பட்ட சுண்டப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் வசிக்கும் பழனிச்சாமி என்பவர் கடந்த, 22ம் தேதி, தனது வீட்டு பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை, யாரோ திருடி விட்டதாக, வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் தலைமையில் திருட்டை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. 100-க்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, கோவை அண்ணாநகர் எல்.ஐ.சி., காலனி, செல்வபுரத்தை சேர்ந்த, சேதுராமன் 32 என்பவரை, போலீசார் கைது செய்தனர். சேதுராமனிடம் இருந்து, 29 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.43 ஆயிரம் பணம் மீட்கப்பட்டது.
சேதுராமன் மீது, கோவை மாநகர் டி2 செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷனில், ஏற்கனவே இரண்டு வழக்குகளும், சாய்பாபா காலனி போலீஸ் ஸ்டேஷனில் ஒரு வழக்கும், நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. சேதுராமனை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.
மேலும்
-
கர்நாடகாவில் கார் மோதி விபத்து; தமிழர்கள் 3 பேர் பலி!
-
வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!
-
அட்டாரி-வாகா எல்லையில் விதிக்கப்பட்டிருந்த தடை; தளர்வு அளித்தது இந்தியா!
-
தமிழக விவசாயிகளை ஏமாற்றும் தி.மு.க., அரசு: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
பயங்கரவாத எதிர்ப்பு கூட்டு முயற்சியை அதிகரிக்கணும்; இந்தியா, எகிப்து முடிவு
-
கோல்கட்டா தீ விபத்து: ஹோட்டல் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது