வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொலை!

வாஷிங்டன்: வாஷிங்டனில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நியூகேஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் இந்திய வம்சாவளியினர் 3 பேர் இறந்து கிடந்தனர். அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து போலீஸ் செய்தி தொடர்பாளர் பிராண்டின் ஹல் கூறியதாவது: ஏப்ரல் 24ம் தேதி துப்பாக்கிச் சூட்டு காயங்களால் இந்திய வம்சாவளியினர் ஸ்வேதா பன்யம் (41), துருவா கிக்கேரி (14), ஹர்ஷவர்தன கிக்கேரி (44) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து விசாரணை நடக்கிறது, என்றார்.
ஒரு கணவன், மனைவி மற்றும் இரண்டு மகன்கள் வீட்டில் வசித்து வந்தனர் என வீட்டு உரிமையாளர் சங்க தலைவர் அலெக்ஸ் குமினா தெரிவித்தார். 3 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. விசாரணைக்கு பிறகே இது பற்றிய மேலும் விவரங்கள் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


மேலும்
-
பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கந்தர்பால் சம்பவத்தில் தொடர்பு; பகீர் தகவல்
-
தெற்கு காஷ்மீரில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள்!
-
உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்? முதல்வரின் கருத்துக்கு அன்புமணி சரமாரி கேள்வி
-
நேற்று கோல்கட்டா: இன்று ராஜஸ்தான்; ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட 4 பேர் பலியான சோகம்!
-
நலத்திட்ட உதவி வழங்கினார் வாசன்
-
' வாகனத்தை பின் தொடராதீர்கள்': ரசிகர்களுக்கு விஜய் அறிவுரை