லோக் அதாலத்துக்கு நிரந்தர உறுப்பினர்

திருப்பூர் : கலெக்டர் அறிக்கை: திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய அறிக்கைப்படி, லோக் அதாலத்துக்கு இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். தகுதியான நபர்கள் விண்ணப்பங்களை, 'தலைவர் / மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், முதன்மை நீதிமன்ற வளாகம், திருப்பூர்' என்ற முகவரிக்கு வரும் 9ம் தேதிக்குள் அனுப்பலாம்.

விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். அறிக்கை வெளியிடப்பட்ட தேதியில், இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். 21 வயதுக்கு குறையாதவராகவும், 62 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Advertisement