சிருங்கேரி மடத்தில் சங்கர ஜெயந்தி விழா

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு, அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் உள்ள சிருங்கேரி சங்கர மடங்களில் நாளை (மே2) சங்கர ஜெயந்தி விழா நடக்க உள்ளது. பைபாஸ் ரோடு மடத்தில் ஏப்.,28 முதல் தினமும் காலை 8:00 மணி, மதியம் 3:30 மணி, மாலை 6:00 மணிக்கு ரிக்வேத பாராயணம் நடந்து வருகிறது.

தினமும் காலை 9:00 மணிக்கு ஆதிசங்கரருக்கு மகன்யாச ருத்ராபிேஷகம், அர்ச்சனை, மாலை 5:00 மணிக்கு ஆதி சங்கரர் அருளிய ஸ்தோத்திரங்கள் பாராயணம் உள்ளிட்டவை நடந்து வருகின்றன. நாளை சங்கரஜெயந்தியை முன்னிட்டு இரு மடங்களிலும் காலை 8:00 மணிக்கு ருத்ர ஏகாதசினி அபிேஷகம், ருத்ர ேஹாமம், அர்ச்சனை நடக்கிறது. மதியம் 12:30 மணிக்கு மகா பிரசாதம் வினியோகம் நடைபெறும். மாலை 5:30 மணிக்கு சங்கர அஷ்டோத்திர பாராயணம் நடக்கிறது. பைபாஸ் ரோடு மடத்தில் மாலை 6:30 மணிக்கு பாலசுப்பிரமணிய சாஸ்திரிகள் 'ஆன்மிகமும், ஆதி சங்கரரும்' என்ற தலைப்பில் பேசுகிறார்.

Advertisement