பழங்குடியினர் குடியிருப்பு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணுார் ஊராட்சியில், 2.23 கோடி ரூபாய் மதிப்பில், 44 பழங்குடியினர் குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன கட்டுமான பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கந்தசாமி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, காட்ராம்பாக்கம் ஊராட்சியில், 1.82 கோடி ரூபாய் மதிப்பில் 36 பழங்குடியினர் குடும்பங்களுக்காக கட்டப்பட்டு வரும், வீடுகளை பார்வையிட்டு, கட்டுமான பணிகள் மற்றும் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளிடம் விரைவாக ஒப்படைக்க அறிவுறுத்தினார்.

மேலும், காட்ராம்பாக்கத்தில் வசித்துவரும் பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களின் குடியிருப்புகளுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement