போலீஸ் செய்திகள்...

கத்தி 'பாண்டிகள்' கைது

பேரையூர்: இப்பகுதியின் மேற்கு தொடர்ச்சி மலைப் அடிவார பகுதிகளில் கத்திகளுடன் இளைஞர்கள் சிலர் சுற்றித்திரிந்தனர். எஸ்.ஐ., சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் மங்கல்ரேவு சமத்துவபுரம் அருண்பாண்டி 22. முத்துப்பாண்டி 25. பால்பாண்டி 22. முத்துநாகையாபுரம் சூரியபாண்டி 19. ஆகிய 4 பேரை கைது செய்தனர். மலையடிவாரப் பகுதிகளில் தனியாக வருவோரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை பறித்து ஆந்திரா சென்று கஞ்சா வாங்கி வியாபாரம் செய்து வந்ததாக தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடையில் திருட்டு

பேரையூர்: காடனேரியில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு விற்பனையாளர்கள் ராமகிருஷ்ணன், வீரராஜபாண்டி ஆகியோர் கடையைப் பூட்டி விட்டுச் சென்றனர். மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 127 மது பாட்டில்களைத் திருடிச் சென்றனர். எஸ்.ஐ.,வேலுச்சாமி விசாரிக்கிறார்.

பஸ் மறியல்

மேலுார்: வெள்ளரிப்பட்டி டோல்கேட்டில் வி.சி.க., சார்பில் மதுரை கலெக்டர் சங்கீதாவை மாற்றகோரி பஸ் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட நிர்வாகி அரசமுத்து பாண்டி, மேலுார் சசி தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர். அதனால் மேலூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

Advertisement