கேரளாவில் வலுக்கும் கனமழை; 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

திருவனந்தபுரம்; கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கேரளாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் பெய்த மழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
கோழிக்கோடு தாமரச்சேரி உள்ளிட்ட பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
மழை மேலும் நீடித்து வருவதால் திருவனந்தபுரம், கண்ணூர், காசர்கோடு, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பத்தனம்திட்டா, மலப்புரம், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையும், கொல்லம், ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எல்லையில் 9வது நாளாக பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி
-
நேற்றைய தினம் லஞ்ச வழக்கில் சிக்கியவர்கள் இவர்கள் தான்!
-
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பரிதாப பலி; 50 பேர் காயம்
-
பணி நேரத்தில் விஜய்க்கு மாலை; மதுரை போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
-
பஹல்காம் சம்பவம் எதிரொலி: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தாக வாய்ப்பு
-
சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவக்கம்; ஆட்சி யாருக்கு?
Advertisement
Advertisement