பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விபத்து; 3 தொழிலாளர்கள் பலி

கட்டாக்: ஒடிசாவில் பாலம் கட்டுமானப் பணியின் போது கிரேன் சரிந்து விழந்த விபத்தில் 3 தொழிலாளிகள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கட்டாக்கில் உள்ள கான் நகர் பகுதியில் இருக்கும் ஆற்றின் குறுக்கே, பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ராட்சத கிரேன் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும், சில சிமென்ட் ஸ்லேப்களும் சரிந்து விழுந்தது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டனர். அதில், 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
290 ரூபாய் சம்பளத்துக்கு ஆந்திரா, மஹா., பணியாளர்கள்
-
ரேஷனில் தரமில்லாத அரிசி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஆய்வு
-
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிராமண சமாஜம் ஆதரவு
-
இலங்கைக்கு தப்பிய அகதியால் கடல் பாதுகாப்பில் கேள்விக்குறி
-
நிழலில் தோழர்கள்; அக்னி வெயிலில் பயணியர்
-
கிரானைட் வழக்கில் சகாயம் காணொலியில் ஆஜராக உத்தரவு
Advertisement
Advertisement