தையல் மிஷினில் மின்சாரம் கசிந்து டெய்லர் பலி

தண்டையார்பேட்டை,தண்டையார்பேட்டை, நெடுஞ்செழியன் தெருவைச் சேர்ந்தவர் வைரமுத்து, 40; டெய்லர். இவரது மனைவி சந்திரமதி. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

வைரமுத்து, தண்டையார்பேட்டை, கருணாநிதி நகரில் உள்ள கார்மெண்ட்ஸ் கடையில் பணிபுரிந்தார். நேற்று துணி தைத்து கொண்டிருந்தபோது, தையல் மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்து, மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர், அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்ததாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement