4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரிப்பு
சென்னை:சென்னை - தஞ்சாவூர், கொல்லம் உட்பட நான்கு விரைவு ரயில்களில், கூடுதலாக முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, எழும்பூர் - கொல்லம் விரைவு ரயிலில், இரு மாக்கத்திலும், கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 1 முதல் இணைக்கப்படும்
நாகர்கோவில் - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை 5 முதல்; எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு முன்பதிவு இல்லாத பெட்டி, ஜூலை, 2 முதல் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பஹல்காம் தாக்குதலுக்கு இதுதான் பதிலடி; உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
நள்ளிரவு 1.22 மணி முதல் 2.46 மணி வரை: ஆபரேஷன் சிந்தூர் முக்கிய தருணங்கள்
-
பாக்., பயங்கரவாத முகாம்களைத் தாக்க இந்தியா பயன்படுத்திய ஆயுதங்கள் இதுதான்!
-
தேசிய அளவில் முதலிடம், உலகளவில் இரண்டாமிடம்: டிரெண்டிங்கில் ஆபரேஷன் சிந்தூர்
-
சீல், அட்டோ 3 கார்கள் புதுப்பிப்பு
-
இந்தியாவுடன் போரை ஆதரிக்காத பாக்., மக்கள் மவுலானா கேள்விக்கு மவுனமே பதில்
Advertisement
Advertisement