விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கும் உணவிற்காக அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது.

மாவட்ட தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது: புதிய நடைமுறையாக உணவு கட்டுபாட்டு அலுவலரிடம் அனுமதி பெற்ற பிறகே பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. பல இடங்களிலிருந்தும் வருபவர்கள் அரசிடம் அனுமதி வாங்குவது சிரமத்திற்குள்ளாக்கும்.

விரதமிருந்து சமைக்கும் பிரசாதம் கடவுளுக்கு வைத்த பின்பே பக்தர்களுக்கு வழங்குகிறோம். பிரசாதத்தை முதலில் அரசிடம் சமர்ப்பித்து பிறகு பக்தர்களுக்கு கொடுப்பது முறையற்றது. எனவே இந்த விதிகள் பக்தர்கள் கடமை செய்வதில் இடையூறு ஏற்படுத்தும். அரசு தளர்வு அளிக்க வேண்டும் என்றார்.

Advertisement