பொதுப்பணித்துறை பொறியாளர் சங்க கூட்டம்

காரைக்குடி காரைக்குடியில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை பொறியாளர் சங்கம் மற்றும் உதவி பொறியாளர் சங்கங்களின் ஒருங்கிணைந்த மாநில மையச் செயற்குழு கூட்டம் நடந்தது.

பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் இ.அரசு தலைமையேற்றார். உதவி பொறியாளர் சங்க மாநில தலைவர் சீனிவாசன் வரவேற்றார். பொறியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் தனசேகரன் பேசினார். காரைக்குடி பொறியாளர் சங்க கிளை தலைவர் ரமேஷ், செயலாளர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பேசினர்.

கூட்டத்தில், பொறியாளர்களின் ஊதிய விகிதம் தொடர்பான முரண்பாடுகளை களைந்திட சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி ஊதிய குறை தீர்ப்பு குழு அமைத்திடாமல் மேல்முறையீடு செய்து, 7வது ஊதியக் குழுவினை பொறியாளர்களுக்கு மட்டும் நடைமுறைப்படுத்தாமல் உள்ள நிதித்துறையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement