ரூ.1,500 கடனுக்காக தொழிலாளி கொலை
தண்டராம்பட்டு: திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த இளையாங்கன்னி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி டேவிட், 45. இவர், அதே பகுதியைச் சேர்ந்த பீட்டர், 52, என்பவரிடம் 20 நாட்களுக்கு முன், 1,500 ரூபாய் கடன் வாங்கினார். நேற்று முன்தினம் மாலை பீட்டர் மற்றும் அவரது நண்பரான பீட்டர்ராஜ், 45, ஆகியோர் டேவிட்டிடம், 1,500 ரூபாயை திரும்ப கேட்டனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பீட்டர், பீட்டர் ராஜ் இருவரும் சேர்ந்து அருகில் இருந்த, ஹாலோ பிரிக்ஸ் கல்லால், டேவிட் தலையில் தாக்கியதில் பலியானார்.
தானிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, பீட்டர், பீட்டர் ராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது
-
ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
-
பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!
Advertisement
Advertisement