'அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை தி.மு.க., இழக்கும்'

திண்டுக்கல்: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுக்களை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார்'' என தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலர் அண்ணாமலை தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., ஆட்சி அமைந்ததும் பழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் என தெரிவித்து விட்டு, தற்போது குழு அமைத்திருப்பதாகவும், அதன் அறிக்கையை செப்டம்பரில் அமல்படுத்துவோம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் 9 அறிவிப்புகளையும் ஆணையாக வெளியிட்டு அமல்படுத்த வேண்டும்.
கொரோனாவின் போது முடக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், விடுப்புக்களை பணமாக்கலாம் என முன்னாள் முதல்வர் கருணாநிதி தெரிவித்த அறிவிப்பு, தற்போது 4 ஆண்டுகால ஆட்சிக்குப் பின்பும் வழங்கப்படவில்லை.
இப்படிப்பட்ட காரணங்களால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓட்டுகளை முதல்வர் ஸ்டாலின் இழந்து வருகிறார். இதனால் 200 தொகுதிகள் வெற்றி என்பது தி.மு.க.,வுக்கு சாத்தியமாக வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.














மேலும்
-
பாகிஸ்தானுக்கு ராணுவ ரகசியங்கள் கசிவு; பஞ்சாபில் இருவர் கைது
-
ஐ.எம்.எப்., செயல் இயக்குநர் சுப்ரமணியம் நீக்கம்; 6 மாதத்திற்கு முன் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
-
பாலம் கட்ட தோண்டிய பள்ளத்தில் விழுந்து தம்பதி பரிதாப பலி; அதிகாலை வேளையில் சம்பவம்
-
கோழிக்கோட்டில் ரூ.5 கோடி ஹவாலா பணம் பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை
-
பெரம்பலூரில் மின்சாரம் பாய்ச்சி மீன்பிடிக்க முயன்ற இருவர் உயிரிழப்பு
-
'சாப்ரான் பெனகோட்டா'ருசி... ஆஹா... அடடா...அய்யோடா!