நீட் தேர்வு துவங்கியது; நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (மே 04) மதியம் 2 மணிக்கு துவங்கியது. தேர்வில் மொத்தம் 22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வை, தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 4) நடைபெற்றது. மதியம் 2 மணிக்கு தேர்வு துவங்கி நடந்து வருகிறது.
மாலை 5.20 மணி வரை தேர்வு நடக்கிறது. நாடு முழுதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 5,453 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 22 லட்சம் பேர் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேரும் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 பேர் தேர்வு எழுதி வருகின்றனர். முன்னதாக, நீட் நுழைவுத்தேர்வை எழுத வந்த மாணவியர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
வாசகர் கருத்து (1)
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
04 மே,2025 - 14:31 Report Abuse

0
0
Reply
மேலும்
-
இந்தியாவில் இறக்கப்பட்ட ரஷ்ய ஏவுகணை; துல்லியமாக தாக்கும் என்பதால் பதற்றத்தில் பாக்.,!
-
விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: ஷீரடியில் குடிபோதை பயணி கைது
-
உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பபெட் ஓய்வு பெறப் போவதாக அறிவிப்பு; யார் இவர் தெரியுமா?
-
ஒருநாளில் இருவேறு சாலை விபத்துகள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பலி
-
பாக்.,கிற்கு எதிராக காய் நகர்த்தும் இந்தியா: பக்லிஹார் அணை தண்ணீர் நிறுத்தம்
-
பத்ரிநாத் கோயில் 15 டன் பூக்களால் அலங்கரிப்பு: 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு
Advertisement
Advertisement