சென்னை ஓட்டலில் மட்டன் குழம்பில் தவளை... வாடிக்கையாளர் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறப்பட்ட போது, மட்டன் குழம்பில் முழு தவளை கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி பஸ் ஸ்டாப் அருகே செயல்பட்டு வரும் நாவலடி கொங்குநாடு என்ற தனியார் ஓட்டலில் சாப்பிட வந்த ஒரு குடும்பத்தினர் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, கடையின் ஊழியர் கொண்டு வந்த மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்றுள்ளனர்.
அதில், முழு தவளை ஒன்று உயிரிழந்த நிலையில், சாப்பிடும் இலையில் பரிமாறப்பட்டுள்ளது. இதனைக் கண்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஓட்டல் ஊழியர்களிடம் கேட்ட போது, அவர்கள் உரிய பதிலை அளிக்காமல், மழுப்பியுள்ளனர்.
இதையடுத்து, தவளை இருந்த உணவை வீடியோவாக பதிவு செய்து விட்டு, சாப்பிட்ட உணவுக்கு பணத்தை கொடுத்து விட்டு வாடிக்கையாளர் சென்றுள்ளார். மேலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து (17)
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04 மே,2025 - 20:45 Report Abuse

0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
04 மே,2025 - 20:05 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
04 மே,2025 - 18:33 Report Abuse

0
0
Reply
India our pride - Connecticut,இந்தியா
04 மே,2025 - 18:27 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
04 மே,2025 - 18:18 Report Abuse

0
0
Reply
Senthoora - Sydney,இந்தியா
04 மே,2025 - 18:14 Report Abuse

0
0
Reply
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
04 மே,2025 - 17:37 Report Abuse

0
0
Reply
KRISHNAN R - chennai,இந்தியா
04 மே,2025 - 17:31 Report Abuse

0
0
Reply
Bhaskaran - Chennai,இந்தியா
04 மே,2025 - 17:29 Report Abuse

0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
04 மே,2025 - 17:05 Report Abuse

0
0
Reply
மேலும் 7 கருத்துக்கள்...
மேலும்
-
36 இலக்கத்தில் வங்கி கணக்குக்கு வந்த பணம்; எலான் மஸ்கை ஓரம்கட்டிய உ.பி. விவசாயி
-
இந்தியா போர் தொடுத்தால் இங்கிலாந்துக்கு பறந்துவிடுவேன்; சொல்கிறார் பாகிஸ்தான் எம்.பி.,
-
இந்தியாவை வென்றது இலங்கை: பெண்கள் ஒருநாள் போட்டியில்
-
அரசு தேர்வில் தோல்வியுற்ற மகன்; ஆச்சர்யம் அளித்த பெற்றோர் செயல்!
-
அன்குர், அபினாத் ஜோடி தங்கம்: 'யூத்' டேபிள் டென்னிசில்
-
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி
Advertisement
Advertisement