2 மான்களை வேட்டையாடிய ராணுவ வீரர் தலைமறைவு

போடி: தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி கல்லாற்று ஓடைப் பகுதியில் துப்பாக்கியால் சருகு மான்களை சுட்டு வேட்டையாடிய கூலித்தொழிலாளியை கைது செய்த வனத்துறையினர், தப்பியோடிய ராணுவ வீரரை தேடி வருகின்றனர்.
போடி வனத்துறையினர் நேற்று முன்தினம் குரங்கணி பகுதியில் இரவு ரோந்து சென்றனர்.
கல்லாற்று ஓடைப் பகுதியில் வனத்துறையினரை பார்த்ததும், குரங்கணி நரிப்பட்டி ராணுவ வீரர் பாக்யராஜ், 40, கூலித் தொழிலாளி கண்ணன், 55, ஆகியோர் தப்பி ஓடினர். கண்ணனை வனத்துறையினர் கைது செய்தனர். ராணுவ வீரர் தப்பியோடி விட்டார்.
விசாரணையில், கல்லாற்று ஓடைப் பகுதியில் இரண்டு சருகு மான்களை, அனுமதி பெறாத துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியது தெரிந்தது.
மான்களின் உடல்கள், ராணுவ வீரர் விட்டுச் சென்ற கார், தோட்டாக்களை வனத்துறையினர் பறிமுதல் செய்து, அவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!
Advertisement
Advertisement