கோவை -- நாகர்கோவில் ரயில் பகுதி ரத்து சிறப்பு ரயில் அறிவிப்பு
விருதுநகர்: மதுரை கோட்டத்தில் கொடை ரோடு -- வாடிப்பட்டி இடையே பராமரிப்புப் பணி காரணமாக கோவை -- நாகர்கோவில் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 31 வரை (வியாழன் தவிர்த்து) தினமும் காலை 8:00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் (16322) மதியம் 1:30 மணிக்கு திண்டுக்கல்லுடன் நிறுத்தப்படும். திண்டுக்கல் -- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. வியாழக்கிழமை வழக்கம் போல் நாகர்கோவில் வரை இயக்கப்படும். மறுமார்க்கம் நாகர்கோவில் -- கோவை ரயில் (16321) வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சிறப்பு ரயில்
பயணிகளின் வசதிக்காக இன்று (மே 5) முதல் திண்டுக்கல் ---- நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன், வியாழன் தவிர்த்து தினமும் மதியம் 3:45 மணிக்கு திண்டுக்கல்லில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06322), கொடை ரோடு, மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக இரவு 9:05 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.
மேலும்
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
-
பிரபல நடிகர் அஜாஸ் கான் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு
-
பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கணும்; தேசிய மகளிர் ஆணையம் திட்டவட்டம்!