தடைக்காலம் எதிரொலி; வெளி மாநில மீன்கள் விற்பனை
கடலுார்; கடலுாரில் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் வெளிமாநில மீன்கள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டன. கடலுார் துறைமுகத்தில் இருந்து ஏராளமான படகுகளில் கடலில் சென்று மீன் பிடித்து வந்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. தற்போது மீன் இனப்பெருக்க காலமாக இருப்பதால் மீன் வளத்தை பெருக்கும் நோக்குடன் கடலில் இழு வலை உதவியால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சிறிய படகுகளில் மீன் பிடித்து விற்பனை செய்கின்றனர். மீன் பிடி தடை காரணமாக அருகில் உள்ள கேரளா, ஆந்திரா, மாநிலங்களில் இருந்து மீன்கள் வரவழைக்கப்பட்டு நேற்று விற்பனை நடந்தது. இதனால் வழக்கமான விலையை விட கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் கூடுதல் விற்பனையானது. குறிப்பாக, பன்னிசாத்தான், கொடுவா, சங்கரா போன்ற மீன்கள் அதிகளவு விற்பனையாகின.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வீடுகளை சேதப்படுத்தும் காட்டு யானை: கிராம மக்கள் ஆவேச மறியல்
-
போராட்டம் நடத்திய அ.தி.மு.க.,வினர் கைது; இ.பி.எஸ்., கண்டனம்
-
கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
-
பஞ்சாபில் சர்வதேச குற்றவாளிகளுடன் தொடர்புடைய 3 பேர் கைது: ஆயுதங்கள் பறிமுதல்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
Advertisement
Advertisement