திருவிளக்கு பூஜை

சாத்துார் : சாத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. சாத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா நடந்து வருகிறது. நேற்று நான்காம் நாளை முன்னிட்டு கோயில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.பூஜை செய்த பெண்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Advertisement