அபராதம் விதிக்காமல் லஞ்சம்: போலீஸ் எஸ்.எஸ்.ஐ., உட்பட 3 பேர் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்: வாகன ஓட்டிக்கு அபராதம் விதிக்காமல் இருப்பதற்காக லஞ்சம் வாங்கிய போலீசார் மூவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



திருப்பூர் மாவட்டம், வஞ்சிபாளையத்தில் திருமுருகன் பூண்டி போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் காரை ஓட்டி வந்த வாகன ஓட்டி ஒருவருக்கு எவ்வித அபராத தொகையும் விதிக்காமல், 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுப்பியதாக புகார் எழுந்தது.


இது தொடர்பாக, எஸ்.எஸ்.ஐ., மோகன், முதல்நிலை போலீஸ்காரர் கோபிநாத் மற்றும் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரேம்குமார் ஆகியோரை திருப்பூர் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

Advertisement