தமிழகத்தில் நாளை போர்க்கால ஒத்திகை: 4 இடங்களை தேர்வு செய்த மத்திய அரசு

சென்னை: தமிழகத்தில் 4 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.இருநாடுகளும் ராணுவ படைகளை தயார் நிலையில் வைத்திருக்கும் நிலையில், நாடு தழுவிய போர்க்கால ஒத்திகையை நாளை(மே 7) நடத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந் நிலையில், தமிழகத்தில் 4 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடத்தப்படுகிறது. கல்பாக்கம், மீனம்பாக்கம், ஆவடி, மணலி ஆகிய 4 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
போர் பதற்ற சூழலின் போது மக்களை எப்படி பாதுகாப்பது, பதற்றமான சூழலில் மக்களை எப்படி வெளியேற்றுவது, தாக்குதலில் இருந்து எவ்வாறு தப்பித்துக் கொள்வது உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்படும்.
54 ஆண்டுகள் கழித்து(இதற்கு முன்னர் 1971ல் நடந்தது) இந்தியாவில் நாளை (மே 7) போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












மேலும்
-
ஓரம் கட்டிய உலக நாடுகள்; சர்வதேச அளவில் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான்!
-
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: மேற்பார்வை குழு பரிந்துரையை செயல்படுத்த உத்தரவு
-
1971ல் சரண் அடைந்ததை மறந்துவிடாதீர்கள்: பாக்., ராணுவ தளபதிக்கு பலுாச் தலைவர் பதிலடி
-
காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது; தீவிர விசாரணை
-
ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்த ஆபரண தங்கம் விலை
-
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதல்: விமான சேவையை நிறுத்தியது ரஷ்யா