தகராறு: ஒருவர் கைது

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி காந்திமைதானவீதியைச் சேர்ந்தவர் சுரேஷ் கண்ணன் 40. இவருக்கும் இதே ஊர் சொர்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்த உதயகுமார் 26. என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது.

சுரேஷ்கண்ணன் வீட்டிற்கு சென்ற உதயகுமார், மின்விசிறியை, நாற்காலியை சேதப்படுத்தினார். தடுக்க வந்த சுரேஷ்கண்ணன் தாயார் புஷ்பம்,மனைவி பிரியாவை தாக்கினார். போலீசார் உதயகுமாரை கைது செய்தனர்.

Advertisement