வில்வித்தை: இந்தியா அசத்தல்

ஷாங்காய்: உலக கோப்பை வில்வித்தை பைனலுக்கு இந்திய ஆண், பெண்கள் அணிகள் முன்னேறின.
சீனாவின் ஷாங்காய் நகரில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 2 நடக்கிறது. காம்பவுண்டு ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, ரிஷாப் யாதவ், ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற இந்திய அணி நேரடியாக காலிறுதியில் பங்கேற்றது. இதில் பிரிட்டனை 239-232 என வீழ்த்தியது. அடுத்து நடந்த அரையிறுதியில் டென்மார்க்கை எதிர்கொண்டது.
முதல் இரு சுற்று முடிவில் 115-118 என பின்தங்கிய இந்தியா, கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட 232-231 என 'திரில்' வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
பெண்கள் அபாரம்
பெண்கள் பிரிவில் இந்தியாவின் மதுரா, ஜோதி, சிகிதா இடம் பெற்ற இந்திய அணி, காலிறுதியில் கஜகஸ்தானை 232-229 என வீழ்த்தியது.
அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, பிரிட்டன் மோதின. இதன் முதல் இரு சுற்று முடிவில் இந்திய அணி 115-118 என பின்தங்கியது. மூன்றாவது சுற்றில் எழுச்சி பெற, 174-174 என சமன் ஆனது. கடைசி சுற்றில் முந்திய (58-56) இந்திய அணி, முடிவில் 232-230 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறியது.
மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!
-
பாக்., ராணுவ தலைமையிடங்களில் பதுங்கிய பயங்கரவாதிகள் மசூத் அசார், ஹபீஸ், சலாவுதீன்
-
உஷார் நிலையில் எல்லைப்பகுதி; சந்தேப்படும் நபரை கண்டதும் சுட உத்தரவு
-
இந்தியா - பாக்., 3 எல்லை சோதனைச்சாவடிகளில் கொடியிறக்க நிகழ்வுகள் நிறுத்தம்: பி.எஸ்.எப் அறிவிப்பு