மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்
சென்னை:'நடப்பாண்டு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 37,000 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் பெற்று தரப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18.30 லட்சம் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 2.38 கோடி மகளிருக்கு, 1.13 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு, 37,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று வரை, 7,917 சுய உதவி குழுக்களுக்கு, 699 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement