மாநில தடகள போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

அரியாங்குப்பம்: மாநில அளவில் நடந்த தடகள போட்டியில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் செல்வம் பரிசு வழங்கினார்.

புதுச்சேரி, அமைச்சூர் அசோசியேஷன் சார்பில், மாநில அளவிலான 38வது தடகள சாம்பியன் ஷிப் போட்டி தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. போட்டியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சூர் தடகள அசோசியேஷன் சார்பில், கோவிந்தசாமி, சீனுவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement