கதண்டு கொட்டி முதியவர் பலி
விருத்தாசலம்: கதண்டு கடித்து பாதித்த நபர்களில், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் உள்ள பூங்காவில், கிராம மக்கள் சிலர், நேற்று மாலை 4:30 மணிக்கு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிரில் உள்ள மரத்தில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் பறந்து வந்து அருகில் இருந்தவர்களை கொட்டத் துவங்கியது.
அங்கிருந்தவர்கள் அலறியபடி ஓடியபோது, அவர்களை விடமால் துரத்தி கொட்டியது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 55; செல்லபெருமாள்,70; உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அதில், ராஜேந்திரன் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இறந்தார். செல்லபெருமாள் விருத்தாசலம் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு; இந்திய ராணுவம் வீடியோ வெளியீடு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
Advertisement
Advertisement