மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் கலெக்டர் தகவல்

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு:

தமிழ்நாடு அரசு மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் அவ்வப்போது மறுசீரமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த வாரியம் அரசு அலுவலர் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு

ஒருமுறை அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.

அதன்படி தற்போது புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டி உள்ளது. மாற்றுத்திறனாளி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள் வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கும் பொருட்டு விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வரும், 22 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement