கேரளாவில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது

மூணாறு: கேரளாவில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 3ல் துவங்கி மார்ச் 26 வரை நடந்தது.

கேரளா, லட்சத்தீவு, வெளிநாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்த 4.27 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை இன்று மதியம் 3:00 மணிக்கு கல்வி துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிடுகிறார். பரிட்சை பவன், கே.ஐ.டி.ஈ., பி.ஆ.டி., ஆகிய இணைய தளங்களில் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

Advertisement