இந்தியா - பாக்., அமைதி பேச்சுவார்த்தையை விரும்பும் டிரம்ப்

5


வாஷிங்டன்: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க டிரம்ப் விரும்புவதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மத்தியஸ்தம் செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து, வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் விரைவில் தணிய வேண்டும் என அதிபர் டிரம்ப் விரும்புகிறார். இரண்டு நாடுகளும் பல ஆண்டுகளாகவே ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளன என்பது அவருக்கு தெரியும்.


இருப்பினும், இரு நாடுகளின் தலைவர்களுடனும், டிரம்ப் நல்ல உறவைக் கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ இரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement