புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் நாளை (மே 11) சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாடு வன்னியர் சங்கம் சார்பில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
புதுச்சேரி வழியாக வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி திண்டிவனம் வழியாக செங்கல்பட்டு சென்று பின்னர், அங்கிருந்து மாமல்லபுரம் செல்ல வேண்டும் என்று தமிழக காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.
அதேநேரத்தில் மாநாட்டுக்கு வருபவர்களால் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க, புதுச்சேரியில் நாளை மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இசைஞானியார் குருபூஜை சிவனடியார்கள் வழிபாடு
-
கோழி பண்ணை அமைக்க மானியம் எண்ணிக்கையை அதிகரிக்க பரிந்துரை
-
வெவ்வேறு சிறப்பு பிரிவுகளில் மாற்றுப்பணியாக பல ஆண்டுகளாக பணியாற்றும் போலீசார் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் ஆள் பற்றாக்குறை
-
காற்றுக்கு சேதமான வாழைகள் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு
-
இந்திய ராணுவத்துக்கு ஆதரவு சென்னையில் ஒற்றுமை பேரணி முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
Advertisement
Advertisement