பள்ளி மாணவிக்கு உதவி

வேடசந்துார் : பூத்தாம்பட்டியை சேர்ந்தவர் தீபிகா 12. பூத்தாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 7 -ம் வகுப்பு படிக்கிறார்.

இவரது தந்தை தர்மராஜ் ஆறு மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்தார்.

இதை தொடர்ந்து மாணவிக்கு அரசின் விபத்து காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.75 ஆயிரத்திற்கான வைப்பு நிதி பத்திரத்தை கண்காணிப்பாளர் செல்வக்குமார் வழங்கினார். ஆசிரியர் கோபிநாதன் உடன் இருந்தார்.

Advertisement