மகள் இறப்பில் சந்தேகம் தந்தை போலீசில் புகார்
ஆண்டிபட்டி : சக்கம்பட்டி ஜெ.ஜெ.,நகரை சேர்ந்தவர் கணேசா 55, தனது கணவர் சேட்டு என்பவருடன் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது இளைய மகள் தமிழ்செல்வியை அதே ஊரைச் சேர்ந்த அய்யனார் மகன் முனீஸ்வரன் என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணம் முடிந்த சில மாதங்களில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழ்ச்செல்வி அவரது வீட்டில் தூக்கிட்டதால் கணவர் முனீஸ்வரன் அவரை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளார்.
மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி சிகிச்சை பலனின்றி இறந்தார். தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் கணேசா ஆண்டிபட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'
Advertisement
Advertisement