சின்னமனுாரில் 2வது நாளாக தேரோட்டம்
சின்னமனூர் : சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் இரண்டாவது நாளாக நேற்று மாலை 5:00 மணிக்கு துவங்கி 6.45 மணிக்கு நிலைக்கு வந்தது.
சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி
மே 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை 5:05 மணிக்கு வடக்கு ரத வீதியில் உள்ள நிலையில் இருந்து தேரோட்டம் துவங்கி, மேற்கு ரத வீதி முடிவில் நிறுத்தப்பட்டது. நேற்று மாலை இரண்டாவது நாளாக சிவ வாத்தியங்கள் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'ஹர ஹர மகாதேவா' என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக மாலை 6:45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது.
தேரோட்டத்தில் சின்னமனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் திரளாக பங்கேற்றனர்.
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'