கூடைப்பந்து அணிக்கு மே 14ல் வீரர்கள் தேர்வு

தேனி : தமிழக கூடைப்பந்து கழகம் சார்பில் 18 வயதிற்கு உட்பட்ட ஆடவர், மகளிர் அணிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் சென்னையில் ஜூன் 2 முதல் 10 வரை நடக்கிறது. தேனி மாவட்ட கூடைப்பந்து அணிக்கு வீரர்கள் தேர்வு மாவட்ட கூடைப்பந்து மைதானத்தில் மே 14 காலை 6:30 மணிக்கு நடக்கிறது. வீரர், வீராங்கனைகள் 2007 க்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94421 51345 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட செயலாளர் அஸ்வின்நந்தா தெரிவித்துள்ளார்.

Advertisement