அரசு கலை கல்லுாரியில் சேர மே 27 வரை விண்ணப்பிக்கலாம்
விருதுநகர் : -விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேர இணையதளம் மூலம் மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழியில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இங்கு இளங்கலை பட்டப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் பிளஸ் 2 முடித்தவர்கள் கல்லுாரிகளில் சேர்ந்து பட்டம் பெற முன் வரவேண்டும். பெற்றோர், உறவினர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற விருப்பமுள்ள மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் மே 27 வரை விண்ணப்பித்து உயர்கல்வி சேர்க்கை பெறலாம், என்றார்.
மேலும்
-
காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? காலை 11 மணிக்கு ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
-
என்.எல்.சி.,யில் தீ விபத்து; பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதம்!
-
போர் நிறுத்த ஒப்பந்தம்; உக்ரைனுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புடின் அழைப்பு!
-
'கொடுத்த வாக்குறுதியை முதல்வர் காப்பாற்றணும்'