தன்னை கொல்ல முயன்ற கணவரை கொன்றார் மனைவி

எரியோடு : மது போதையில் தன்னை கொல்ல முயன்ற கணவரை, கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு, அச்சணம்பட்டியைச் சேர்ந்தவர் தனியார் மில் வேன் டிரைவர் முருகபாண்டி, 42. இவரது மனைவி முத்துலட்சுமி, 35. முருகபாண்டி வருமானத்தில் பெரும் பகுதியை மது குடித்துவிட்டு, வீட்டு செலவிற்கு பணம் தராமல் இருந்தார்.

மேலும், செலவுக்கு பணம் கேட்ட முத்துலட்சுமியிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வந்த முருகபாண்டி தகராறு செய்து, முத்துலட்சுமியை தாக்கி கழுத்தை நெரித்தார். ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, முருகபாண்டியின் கழுத்தை நெரித்ததில் மயங்கி விழுந்து இறந்தார். முத்துலட்சுமியை எரியோடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement